search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென்னாகரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை
    X

    பென்னாகரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை

    பென்னாகரத்தில் அ.தி.மு.க மாநில விவசாய அணி தலைவர் வீட்டில் இன்று சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #ADMK
    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பால்வளத்துறை தலைவரும், அ.தி.மு.க மாநில விவசாய அணி தலைவருமான டி.ஆர். அன்பழகன். இவர் பென்னாகரம் அடுத்துள்ள தாளப்பள்ளம் என்ற கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே அலுவலகம் உள்ளது.

    மேலும் அவர் அரசு காண்டிராக்ட் வேலைகளை எடுத்து நடத்தி வருகிறார். அதற்கு அவர் அரசுக்கு சேவை வரி கட்ட வேண்டும். ஆனால் வரியை கட்டாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் திருச்சி சுங்கவரித்துறை அதிகாரி ரவிந்திரநாத் தலைமையில் இன்று 8 மணி அளவில் பென்னாகரம் தாளப்பள்ளம் டி.ஆர்.அன்பழகன் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது அவரிடம் அரசு காண்டிராக்ட் எடுத்து நடத்துவதால் அதற்கான வரியை கட்டவில்லை என்றனர். அதற்கு அவர் அரசு கட்ட வேண்டிய சேவைவரியை நான் சரியாக தான் கட்டி வருகிறோம்.

    அதற்கான ரசீதை எடுத்து அதிகாரியிடம் கொடுத்தார். அவர்கள் அந்த ரசீதை வாங்கி கொண்டு நாங்கள் சரி பார்த்து விட்டு தருகிறோம் என்றனர். இந்த சோதனை தொடர்ந்து 4 மணி நேரம் நடந்தது.

    சுங்கவரித்துறையில் இருந்து எங்கள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதற்கான பதிலை நாங்கள் ஓசூர் அலுவலகத்திற்கு முறையாக அனுப்பி வைத்து விட்டோம். ஆனால் திருச்சி அலுவலகத்திற்கு இன்னும் வரவில்லை என அதிகாரிகள் கேட்டனர். அந்த நோட்டீஸ்க்கான பதிலை நான் அதிகாரியிடம் கூறினேன். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். #ADMK
    Next Story
    ×