search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பானி புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தமிழகத்துக்கு ரூ.309 கோடி
    X

    பானி புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தமிழகத்துக்கு ரூ.309 கோடி

    பானி புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. #CycloneFani
    சென்னை:

    தமிழகத்தை மிரட்டி வந்த பானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ள வேளையிலும் இந்த புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு  4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அவ்வகையில் தமிழகம் உள்பட 4 மநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு ரூ.309 கோடி ரூபாயும், ஆந்திரா 200.25 கோடி ரூபாயும், ஒடிசா 340.87 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் மே 3ந்தேதி ஒடிசாவின் பூரி மாவட்ட கடலோர பகுதியில் ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.   #CycloneFani
    Next Story
    ×