என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம்- வாலிபர் கைது
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட தேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண் கப்பலூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் சின்னசாமி (வயது 34) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சின்னசாமிக்கும், கட்டதேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் திடீரென மாயமாகி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாயமான இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில், சின்னச்சாமி கோவைக்கு அழைத்துச் சென்று மருதமலையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் உறவு வைத்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் திருமங்கலம் அழைத்து வந்து விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சின்ன சாமியை கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்