search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கக்கடலில் உருவானது பானி புயல் - சென்னையை நெருங்காது
    X

    வங்கக்கடலில் உருவானது பானி புயல் - சென்னையை நெருங்காது

    வங்கக் கடலில் உருவான பானி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #Fani #TNRains
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்னும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் பானி புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் தெரிகிறது. பானி புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற கூடும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #Fani #TNRains 
    Next Story
    ×