search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
    X

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. #IMD #CycloneFani #Depression
    சென்னை:

    இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்போது ‘ஃபானி புயல்’ என பெயரிடப்படும். இந்த பெயரை வங்காளதேசம் பரிந்துரைத்துள்ளது.

    இதற்கிடையே வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது கிழக்கு இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி இலங்கை வழியாக 30-ம் தேதி வடதமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இன்னும் 4 நாட்களில் இந்த புயல் வடதமிழகத்தை நெருங்கும் என கூறப்பட்டுள்ளது. #IMD #CycloneFani #Depression
    Next Story
    ×