search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறந்த 2 நாளில் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
    X

    பிறந்த 2 நாளில் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

    தர்மபுரி அருகே பெண் குழந்தை பிறந்து 2 நாளில் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி வாசுகி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த வாசுகிக்கு நேற்று முன்தினம் 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    இந்த குழந்தை உடல் எடை குறைவாகவும், மூச்சுதிணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்த குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது. பிறந்த 2 நாட்களில் பெண் குழந்தை திடீரென இறந்தது குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×