என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
Byமாலை மலர்25 April 2019 2:37 PM GMT (Updated: 25 April 2019 2:37 PM GMT)
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #TNElections2019 #TNAssemblyBypoll
சென்னை:
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. மே 2-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகல் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்கூறுகையில், ஏப்ரல் 27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை. 28-ம் தேதி ஞாயிறு விடுமுறை காரணமாக இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெறப்படாது என தெரிவித்தார். #TNElections2019 #TNAssemblyBypoll
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X