என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்- வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில்
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் திலகர் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகன் அஜித்குமார் ( வயது 21), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கு மாணவி மறுக்கவே நண்பர்களாக பழகுவோம் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நண்பர்களாக இருவரும் பேசி வந்துள்ளனர். இருவரும் வாட்ஸ்அப்களில் தினமும் கருத்துக்களை பரிமாறி வந்துள்ளனர்.
இதற்கிடையே அஜித்குமார் மாணவி மீது ஒரு தலை காதல் கொண்டுள்ளார். மாணவி தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் முகப்பில் வைத்துள்ளார். அதனை பதிவிறக்கம் செய்த அஜித்குமார், மாணவியின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படத்துடன் இணைத்து செல்போனில் வைத்திருந்தார்.
இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்ததோடு இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அஜித்குமார் தன்னை காதலிக்காவிட்டால், உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக அஜித்குமாரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி மகிழேந்தி விசாரித்தார். இதில் அஜித்குமார் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்