search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோதையாறு மின்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
    X

    கோதையாறு மின்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

    கோதையாறு மின்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குலசேகரம்:

    குமரி மாவட்டம் நித்திர விளை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின்ராஜ் (வயது 26).

    இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ் நாடு சிறப்பு காவல்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். அஜின்ராஜை பேச்சிப்பாறை அருகே கோதையாறில் செயல்படும் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமித்திருந்தனர். அங்கு அவருடன் மேலும் சில போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று காலை அஜின்ராஜும், கணேசன் என்ற இன்னொரு போலீஸ்காரரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோதையாறில் உள்ள மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்காக கணேசன் சென்றுவிட்டார்.

    பொருட்களை வாங்கிக் கொண்டு கணேசன் கோதையாறு மின்நிலையத்திற்கு திரும்பிச் சென்ற போது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போலீஸ்காரர் அஜின்ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்தார்.

    உடனே இதுபற்றி பேச்சிப்பாறை போலீசாருக்கு கணேசன் தகவல் கொடுத்தார். இங்கிருந்து இன்ஸ் பெக்டர் ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கோதையாறு மின் நிலையத்திற்கு விரைந்து உள்ளனர். போலீசார் விசாரணையில்தான் அஜின்ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி தெரியவரும்.

    Next Story
    ×