search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஆவின் அருகே ரவுடியை வெட்டிக்கொலை செய்த 4 பேர் கும்பல் கைது
    X

    வேலூர் ஆவின் அருகே ரவுடியை வெட்டிக்கொலை செய்த 4 பேர் கும்பல் கைது

    வேலூர் ஆவின் அருகே ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராணுவ வீரராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

    செல்வராஜ் மீது சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில், சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் தேரை தீ வைத்து எரித்தது, ஒரு வீட்டின் மீது வெடிகுண்டு வீசியது ஆகிய 2 வழக்குகளும், வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 2 வழக்குகளும் உள்ளன.

    அதேபோன்று குடும்ப தகராறில் கே.வி.குப்பத்தில் வசித்து வந்த அவருடைய மாமனார் பெருமாள் வீட்டை தீ வைத்து எரித்தது, கடந்த 2014-ம் ஆண்டு பெருமாளை அடித்து கொலை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திலும் செல்வராஜ் மீது உள்ளது.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு ரவுடியாக வலம் வந்த செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். கடந்த 19-ந் தேதி வேலூர் ஆவின் அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து செல்வராஜை வெட்டிக்கொலை செய்தது. யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    பால்பண்ணை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதில் கொலை நடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி வீச்சு கூட்டாளிகளுக்கும், செல்வராஜிக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். வீச்சு கூட்டாளிகள் விஜயராகபுரத்தை சேர்ந்த யுவராஜ் (23), பிரபு (23), கணேசன் (21), கிரிதரன் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    யுவராஜிக்கும் கொலையுண்ட செல்வராஜிக்கும் மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். சம்பவத்தன்று யுவராஜ் அவரது கூட்டாளிகள் பிரபு, கணேசன், கிரிதரன் ஆகியோருடன் விஜயராகவபுரம் சென்றனர். அங்கு தெருவில் நின்று கொண்டிருந்த செல்வராஜை தாக்கியுள்ளனர். அவர் தப்பி ஓடினர்.

    தேசிய நெடுஞ்சாலையில் ஓடிச் சென்ற அவரை விரட்டி விரட்டி வெட்டினர். பலத்த வெட்டு காயங்களுடன் சாலையை கடந்த செல்வராஜ் ஆவின் வாசல் தரையில் சாய்ந்தார். அவரை விரட்டி வந்தவர்கள் செல்வராஜ் சுய நினைவு இழந்ததையடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ரவுடி வீச்சு கூட்டாளிகள் யுவராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தோட்டப்பாளையம் ஆட்டோ டிரைவரை கடத்தி பாலாற்றில் கொன்று புதைத்த வழக்கு உள்ளது. ரவுடிகள் மோதலால் சத்துவாச்சாரி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×