search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கானூர்பட்டி அருகே வாலிபர் தற்கொலை
    X

    திருக்கானூர்பட்டி அருகே வாலிபர் தற்கொலை

    திருக்கானூர்பட்டி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி சேர்ந்தவர் நடராஜன் (வயது 23). கடந்த சில மாதங்களாக நடராஜன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி இரவு நடராஜன் அவரது வீட்டின் அருகே எலி மருந்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்து கிடந்துள்ளார் .உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நடராஜன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×