search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் பயணி திடீர் மரணம்
    X

    சென்னை விமான நிலையத்தில் பயணி திடீர் மரணம்

    சென்னை விமான நிலையத்தில் பெங்களூர் செல்ல வந்த விமானி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.
    ஆலந்தூர்:

    திருச்சியை சேர்ந்தவர் பெட்ரிக் ஜோசப் (வயது 61). இவர் மனைவி மற்றும் மகளுடன் பெங்களூர் செல்வதற்காக நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து விட்டு பெட்ரிக் ஜோசப் குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் சுருண்டு விழுந்தார். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் பெட்ரிக் ஜோசப்பை மீட்டு விமான நிலையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெட்ரிக் ஜோசப் பரிதாபமாக இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பது தெரிய வந்தது.
    Next Story
    ×