search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்
    X

    பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

    பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சென்னை, அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொன்பரப்பியில் நடந்த தாக்குதல் கட்சிகளுக்கிடையில் நடந்த வழக்கமான தேர்தல் வன்முறையல்ல. சாதியின் பெயரால் தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட பாசிச ஒடுக்குமுறையாகும்.

    தலித்துகளின் வாக்குரிமையைப் பறிப்பது, வன்முறை வெறியாட்டம் நடத்துவது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள வாக்குகள் போடுவது போன்ற சட்டவிரோத, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அனைத்துத் தரப்பு எளியோரையும் அச்சுறுத்தும் அடக்குமுறை போக்காகும்.

    இருபத்தோராம் நூற்றாண்டிலும் அரசியல் ஆதாயத்திற்காக சாதியின் பெயரால் எளிய மக்களின் வாக்குரிமையைத் தடுப்பது, அம்மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்துவது போன்ற வெட்கக்கேடான கொடூர ஒடுக்குமுறைகள் தொடர்வது ஜனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழிவாகும். இந்திய தேசத்துக்கே நேர்ந்த பெரும் தலைக்குனிவாகும்.

    இந்நிலையில், இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வலியுறுத்தவும், சாதிய மதவாத சக்திகளுக்கு உரிய தண்டனையளிக்க வற்புறுத்தவும் கோரி, விடுதலைச்சிறுத்தைகளின் ஒருங்கிணைப்பில் தி.மு.க. தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், நாளை (24-ந்தேதி) சென்னையிலும் 25-ந்தேதி அரியலூரிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×