search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
    X

    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

    மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). மறைமலை நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் செவிலியராக உள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    நேற்று இரவு கார்த்திகேயன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×