search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை
    X

    அரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை

    அரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அரும்பாக்கம், வள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் விஜயன். அரும்பாக்கம் ,பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    காலையில் அவர் கடை திறக்க வந்த போது ‌ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சிறிய லாக்கர் உடைக்கப்பட்டு ரூ. 18 லட்சத்து 55 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விஜயன் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×