search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கரையில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை
    X

    மதுக்கரையில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை

    மதுக்கரையில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    மதுக்கரை வஞ்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சார்லி (வயது 52). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்சியா நர்சாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று புனித வெள்ளியையொட்டி சார்லி, தனது மனைவி, மகளுடன் ஆலயத்துக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டை நன்கு நோட்ட மிட்டு, ஆட்கள் வெளியே செல்வதை கண்காணித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×