search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் தொழிலாளி தற்கொலை
    X

    தஞ்சையில் தொழிலாளி தற்கொலை

    தஞ்சையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 38) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த காளிதாஸ் திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காளிதாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி அவரது தந்தை சுந்தரம் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×