என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கமுதி அருகே நடத்தையில் சந்தேகம்: பெண் வெட்டிக்கொலை
கமுதி:
கமுதி அருகேயுள்ள அபிராமம் நகரத்தார் குறிச்சியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராக்கி (38). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதமாக செல்லப்பாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரால் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராக்கியின் நடத்தையில் செல்லப்பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராக்கியை அவதூறாக பேசினார்.
இந்த நிலையில் ராக்கி இன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆவேசமாக வந்த செல்லப்பாண்டி சரமாரியாக ராக்கியை அரிவாளால் வெட்டினார்.
இதைப்பார்த்த அவர்களது குழந்தைகள் அலறித்துடித்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து அபிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் அபிராமம் இன்ஸ் பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ் பெக்டர்கள் முருகன், சித்ராதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று ராக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டியை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்