search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து
    X

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொழிற்சாலையில் இன்று இரவு திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ValluvarKottam #FireinFactory
    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று இரவு பயங்கர தீப்பற்றி எரிந்தது. 

    தகவலறிந்து தீயை அணைக்க 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. 20க்கு மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தொழிற்சாலையில் பற்றிய தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தொழிற்சாலை அருகில் வசிப்போர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டனர். தீ பர்வாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. #ValluvarKottam #FireinFactory
    Next Story
    ×