search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளத்தில் அதிக விலைக்கு மதுவிற்ற 3 பேர் கைது
    X

    சாத்தான்குளத்தில் அதிக விலைக்கு மதுவிற்ற 3 பேர் கைது

    சாத்தான்குளத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிக விலைக்கு மதுவிற்ற 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 532 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    சாத்தான்குளம்:

    தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் தட்டார்மடம் பகுதிக்குட்பட்ட அழகியவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இடைச்சிவிளையை சேர்ந்த ரவிக்குமார் (21), சார்வின் (34), வேல்முருகன் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பதற்காக மது வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 532 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×