search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கூடல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
    X

    முக்கூடல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    முக்கூடல் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குளம்:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது23). டிராக்டர் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இசக்கிபாண்டி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. 

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இசக்கி பாண்டி விஷத்தை குடித்து விட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இசக்கிபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    Next Story
    ×