search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே பஸ் விபத்தில் வாலிபர் பலி
    X

    உளுந்தூர்பேட்டை அருகே பஸ் விபத்தில் வாலிபர் பலி

    உளுந்தூர்பேட்டை அருகே பஸ்சில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ராஜவீதி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34) இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்தார். சரவணன் தனது தந்தையாருமான குணசேகரன் என்பருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்டு ரெயில் மூலம் விழுப்புரம் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து. அரசு பஸ் ஒன்றில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே பஸ்ஸில் இருந்து இறங்க முயற்சி செய்த சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறித்த சென்ற எடைக்கல் போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இது குறித்து எடைக்கல் போலீசார் அரசு பஸ் டிரைவர் கீழ்தனியாளம்பட்டு பகுதியை சேர்ந்த அசுவத்தாமன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றன.
    Next Story
    ×