search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகள் மாணவர்கள் 92.38 சதவீதம் தேர்ச்சி
    X

    ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகள் மாணவர்கள் 92.38 சதவீதம் தேர்ச்சி

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 94 அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 305 மாணவ - மாணவிகள் எழுதினர். இதில் 9 ஆயிரத்து 520 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.38 ஆகும்.
    ஈரோடு:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டம் தேர்ச்சி வீகிதத்தில் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 2-ம் பிடித்தது.

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 94 அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 305 மாணவ - மாணவிகள் எழுதினர். இதில் 9 ஆயிரத்து 520 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.38 ஆகும்.

    இதே போன்று ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 2 ஆயிரத்து 404 மாணவர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 4 ஆயிரத்து 533 மாணவிகள், இருபாலரும் படிக்கும் பள்ளியில் 17 ஆயிரத்து 379 மாணவ-மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 316 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 2 ஆயிரத்து 152 மாணவர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 4 ஆயிரத்து 323 மாணவிகள், இருபாலரும் படிக்கும் பள்ளியில் 16 ஆயிரத்து 680 மாணவ-மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    Next Story
    ×