search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ஒரத்தநாடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    ஒரத்தநாடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவரது மனைவி ரேகா (30). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சக்திவேல், அடிக்கடி மனைவி ரேகாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரேகா, நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ரேகாவின் தாய் வேதவள்ளி பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×