search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈத்தாமொழி அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    ஈத்தாமொழி அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    ஈத்தாமொழி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கநாடார் (வயது 49). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் மரவேலைக்கு சென்றிருந்தார். பின்னர் இரவு அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனை கண்டுஅதிர்ச்சி அடைந்த தங்கநாடார் ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மாரி முத்து மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது, அங்கிருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் 1½ பவுன் எடையுள்ள தங்க செயின், ½ பவுன் மோதிரம் ஆகியவையும் மற்றொரு பீரோவில் இருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்க பணம், மேஜையில் இருந்த செல்போன், சமையல் அறையில் இருந்த மின்சார அடுப்பு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், மரபீரோ ஆகிய இடங்களில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையர்களின் 2 கைரேகை சிக்கியது.

    இந்த கைரேகைகளை வைத்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா உள்ளதா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×