search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மங்கலம் அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
    X

    மங்கலம் அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

    மங்கலம் அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    மங்கலம்:

    மங்கலம் அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி ராமச்சந்திரன் (வயது 52). மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான, இவர் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதை அவருடைய மனைவி கண்டித்தார்.

    இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இறந்தார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×