search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாசுதேவநல்லூரில் வீட்டில் தூங்கிய தாய்- மகளிடம் 5 பவுன் நகை பறிப்பு
    X

    வாசுதேவநல்லூரில் வீட்டில் தூங்கிய தாய்- மகளிடம் 5 பவுன் நகை பறிப்பு

    வாசுதேவநல்லூரில் வீட்டில் தூங்கிய தாய்- மகளிடம் 5 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் புதுமந்தை 3-வது தெருவை சேர்ந்தவர் சந்திரராஜ் (வயது55). பால் வியாபாரி. இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வாசுதேவி. சம்பவத்தன்று சந்திரராஜ் பால் எடுக்க சென்று விட்டார். இந்திராவும், வாசு தேவியும் வீட்டில் படுத்து தூங்கினர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது.

    இந்த வேளையில் வீட்டின் பின்பக்க வழியாக மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் தூங்கி கொண்டிருந்த இந்திரா, வாசுதேவி அணிந்திருந்த 5 பவுன் நகைகளை பறித்து சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். சத்தம் கேட்டு திடுக் கிட்டு விழித்த இந்திரா திருடன் திருடன் என கத்தினார்.

    அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுபற்றி வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×