என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என் வீட்டில் சோதனை செய்தது சட்டத்திற்கு புறம்பானது - கனிமொழி
Byமாலை மலர்16 April 2019 5:23 PM GMT (Updated: 16 April 2019 5:23 PM GMT)
தூத்துக்குடியில் நான் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கனிமொழி கூறியிருக்கிறார். #Kanimozhi #ITRaid
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனைக்குப் பிறகு கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அவர் பேசும்போது, ‘சுமார் 8.30 மணியளவில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். உரிய ஆவணம் இருக்கிறதா என்று கேட்டேன். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். என் வீட்டில் சோதனை செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது.
சோதனைக்குப் பின் ஒன்றும் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டார்கள். தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சோதனை செய்ய தயாரா?. தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காக சோதனை நடைபெற்றிருக்கிறது. தோல்வி பயத்தால் சோதனை செய்யப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X