search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர்
    X

    தேனி அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர்

    தேனி அருகே குடிப்பதற்காக கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோம்பை வடக்கு தெரு காமராஜர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது48). கோம்பை காலனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (37). சம்பவத்தன்று கணேசன் வீதியில் நடந்து வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அப்பகுதியில் வந்த பாண்டி, கணேசனை வழிமறித்து குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணத்தை தருமாறு பாண்டி மிரட்டி பணத்தை பறித்துள்ளார். இது குறித்து கணேசன் கோம்பை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×