search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பியூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
    X

    நம்பியூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி

    நம்பியூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார் தற்போது திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த 14 தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு திருப்பூர் பனியன் கம்பெனிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அன்றைய தினம் தனது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்பு மாலை 5 மணி அளவில் நம்பியூர் அருகே உள்ள மூணாம் பள்ளி கீழ்பவானி வாய்க்காலில் தனது நண்பர்களான செல்வம், வினோத், ஜோன்ஸ், ஆகியோருடன் காரில் வந்த கணேஷ் குமார் கீழ்பவானி வாய்க்காலில் கரைப்பகுதியில் குழித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது கணேஷ் குமார் திடீரென வாய்க்காலின் நடுப்பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அவருக்கு நீச்சல் தெரியாததால் கரை திரும்பவில்லை. தொடர்ந்து நண்பர்கள் அப்பகுதியில் உள்ள நபர்களிடம் சம்பவத்தைப் பற்றி கூறினர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    அதனைத் தொடர்ந்து கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது மாலை வரை தேடப்பட்டது.

    பின்பு போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மறுநாள் காலையில் தேடுதல் பணி தொடங்கியது. நேற்று மாலை கணேஷ் குமார் உடல் வாய்க்காலின் மேல் பகுதியில் மிதந்து கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கணேஷ் குமாரின் அண்ணன் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×