search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபிஸ்தலம் ஆற்றில் மிதந்த ஆண் பிணம்
    X

    கபிஸ்தலம் ஆற்றில் மிதந்த ஆண் பிணம்

    கபிஸ்தலம் அருகே ஆற்றில் ஆண் பிணம் கிடைப்பதாக போலீசார் தவகவல் வந்தது. போலீசார் பிணத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. கருப்பு நிற சட்டை வேஷ்டி அணிந்த நிலையில் உடல் அழுகி ஒதுங்கி கிடந்த பிணத்தை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வீரமாங்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர்.

    வீரமாங்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் இதுபற்றி கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஆற்றில் மூழ்கிய வாலிபர் யார்? அவரை யாராவது கொலை செய்து தண்ணீரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×