search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் - க.அன்பழகன் அறிவிப்பு
    X

    முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் - க.அன்பழகன் அறிவிப்பு

    அன்புமணி ராதாஸ் - முல்லை வேந்தன் சந்திப்பு நிகழ்ந்த நிலையில், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். #MullaiVenthan #DMK
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

    தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் செந்தில்குமாரும், அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாசும், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் களம் காண்கின்றனர். தருமபுரி தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அன்புமணி, திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.



    கடந்த 2014 தேர்தலுக்கு பிறகு திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முல்லை வேந்தன் அதிருப்தி காரணமாக தேமுதிக-வில் இணைந்தார். பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் திமுக-வுக்கு திரும்பினார். கோவை மக்களவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இவர், சமீப காலமாக மீண்டும் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் - முல்லை வேந்தன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #MullaiVenthan #DMK

    Next Story
    ×