search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர் சுருண்டு விழுந்து மரணம்
    X

    சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர் சுருண்டு விழுந்து மரணம்

    சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    திரிசூலத்தை சேர்ந்தவர் கவுரி (வயது 40). இவர் சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் டோக்கன் வழங்கும் வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை அவர் வழக்கம் போல் வாகன ஒட்டிகளுக்கு டோக்கன் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் கவுரியை மீட்டு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் கவுரி ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×