search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அருகே விபத்து: தாய்- மகள் பலி
    X

    ராஜபாளையம் அருகே விபத்து: தாய்- மகள் பலி

    ராஜபாளையம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 மாத கைக் குழந்தையுடன் தாய் பலியானார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வேல் முருகன் (வயது 32). டயர் வல்கனைசிங் மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முனீசுவரி (30). இவர்களுக்கு அனுஷ்கா தேவி (7), அனுப்ரியா (5), தேவி ப்ரியா (2 மாத கை குழந்தை) உள்ளனர்.

    இன்று அதிகாலை இவர்கள் அனைவரும் காரில் தென்காசிக்கு புறப்பட்டனர். காரை வேல்முருகன் ஓட்டிச்சென்றார்.

    தேவிபட்டிணம் விலக்கில் சோதனைச்சாவடி அருகே அதிகாலை 3.30 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது தென்காசியில் இருந்து மதுரைக்கு மரப்பாரம் ஏற்றி வந்த லாரி அங்கு நின்று கொண்டிருந்தது.

    லாரி நிற்பதை காரை ஓட்டிவந்த வேல் முருகன் சரியாக கவனிக்க வில்லை என தெரிகிறது. லாரி அருகே வந்ததும், சுதாரித்துக் கொண்ட அவர் காரை நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த முனீசுவரி, 2 மாத கைகுழந்தை தேவிபிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    சோதனைச்சாவடியில் இருந்த போலீசார் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பலத்த காயத்துடன் காருக்குள் சிக்கிக் கொண்ட வேல் முருகன், அவரது மகள்கள் அனுஷ்கா தேவி, அனுப்பிரியா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ராமசுப்பு, சேத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்.இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×