search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளர்ச்சி பணிகள் தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன்
    X

    வளர்ச்சி பணிகள் தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன்

    சாத்தூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் பிரசாரம் செய்தார்.
    சாத்தூர்:

    சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் போட்டியிடுகிறார்.

    சாத்தூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் தெர்டர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்க ளியுங்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ். ஆர். ராஜவர்மன் கேட்டு கொண் டார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீ காரம் அளிக்கும் வகையில் நடை பெறும் இந்த தேர்த லில் வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். சாத்தூர் தொகுதியில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப் பட்டுள்ளன. சாத்தூரில் அரசு கலைக்கல்லூரி, வைப் பாற்றில் ரூ. 13 கோடியில் மேம்பாலம், தாலுகா அலுவலகத்திற்கு தனியாக புதிய கட்டிடம், நீதிமன் றத்திற்கு புதிய கட்டிடம், வெம்பக்கோட்டைக்கு புதிய வட்டாட்சியர் அலுவலகம், புதிய வருவாய் கோட்டம், புதிய ஐ.டி.ஐ. கல்லூரி, சாலைகள் விரிவாக்கம், ஏராளமான பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தியது.

    ரூ.3 கோடியில் இருக்கன் குடி குடிநீர் திட்டம் உட்பட ஏராளமான திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிந்து ஆய்வு பணிகள் நடை பெறுகிறது.

    இன்னும் ஒருசில வாரங்க ளில் அனைத்து கிராமங் களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்கப்படும். சாத்தூர் தொகுதியில் தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்க ளிக்க வேண்டும்.

    பட்டாசு ஆலைகள் இன்று திறந்து இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். தமிழக முதல்வர் சரியான வழக்கறிஞரை வைத்து வாதாடியதால் பட்டாசு ஆலைகள் திறக்க முடிந்தது என்றார். #ADMK
    Next Story
    ×