என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பரீட்சை சரியாக எழுதாததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
மதுரை:
மதுரை வண்டியூர் கம்பர் தெருவைச் சேர்ந்த மலைச்சாமி மகள் சரண்யா தேவி (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். அப்போது நடந்த அரசு தேர்வில் இவர் சரியாக பரீட்சை எழுத வில்லை.
இதனால் தேர்வில் தோற்றுப்போய் விடுவேன் என்று பெற்றோரிடம் கூறினார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரண்யாதேவி தூக்குப்போட்டு தற் கொலை செய்தார். இது தொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டையை அடுத்த தாரப்பட்டியைச் சேர்ந்தவர் கல்லாயுதம் (42). இவர் சம்பவத்தன்று காலை அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது பாம்பு கடித்தது.
இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்லாயுதம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்