என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னமராவதி அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
Byமாலை மலர்11 April 2019 6:04 PM GMT (Updated: 11 April 2019 6:04 PM GMT)
பொன்னமராவதி அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
பொன்னமராவதி:
சிவகங்கை மாவட்டம், சுல்லாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதி அருகே பெருமாள் கோவில் பின்புறத்தில் கழுத்தில் கத்தியால் குத்திய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், சுல்லாம்பட்டியை சேர்ந்த தினேஷ் (28) என்பவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சுல்லாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதி அருகே பெருமாள் கோவில் பின்புறத்தில் கழுத்தில் கத்தியால் குத்திய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், சுல்லாம்பட்டியை சேர்ந்த தினேஷ் (28) என்பவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X