search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நர்சிங் கல்லூரி, சொசைட்டி அமைக்கப்போவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த 2 பேர் கைது
    X

    நர்சிங் கல்லூரி, சொசைட்டி அமைக்கப்போவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த 2 பேர் கைது

    நர்சிங் கல்லூரி, சொசைட்டி அமைக்கப் போவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குள்ளனம்பட்டி:

    மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் டேவிட் பீட்டர் (வயது47), பாக்கியலட்சுமி (36). இவர்கள் கொடைக்கானலில் நர்சிங் கல்லூரி அமைக்கப்போவதாக கூறி பரணிகுமார் என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கி உள்ளனர்.

    பரணி குமாரின் மனைவி மீனாகுமாரியை கல்லூரியின் முதல்வராக நியமிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் கல்லூரி கட்டாமல் மோசடி செய்துள்ளனர்.

    மேலும் சிலரிடமும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளனர். இது குறித்து டி.எஸ்.பி. ஜஸ்டின் பிரபாகரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ரெய்கானா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம், சொகுசு கார், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சொசைட்டி அமைக்கப்போவதாக கூறி மேலும் பலரிடம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×