என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாராயணசாமி நாகரீகத்தோடு பேச வேண்டும்- அன்பழகன் எம்.எல்.ஏ. பேச்சு
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து உப்பளம் தொகுதியில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வீதி, வீதியாக, வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
உப்பளம் நேதாஜி நகர் 2 பகுதியில் தேசமுத்துமாரியம்மன் கோவில் அருகில் இருந்து இன்று அன்பழகன் பிரசாரத்தை தொடங்கினார். வீடு, வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமிக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். முன்னதாக வில்லியனூரில் நடந்த பிரசாரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
எனது தரம் பற்றி முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து முதல்-அமைச்சரின் பேச்சு அநாகரீகத்தின் உச்சத்தில் உள்ளது. எங்களை சகட்டுமேனிக்கு வசை பாடியதோடு, அ.தி. மு.க.வினருக்கு சூடு, சொரணை இல்லையா? என கேட்டு அம்மா பேசிய வீடியோவை காண்பித்தார்.
பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் புதுவையில் உள்ள பேயை ஓட, ஓட விரட்டி அடிப்பேன் என கவர்னரை வசைபாடினார். தேர்தலுக்குப்பிறகு ஆட்சி மாற்றம் என்ற மக்கள் எண்ணத்தை கூறினால் எங்களை உள்ளே பிடித்து போடுவேன் என அதிகார மமதையில் மிரட்டினார். முன்னாள் முதல்-அமைச்சர் என்று பாராமல் ரங்கசாமி பதவி வெறி பிடித்து அலைகிறார் என கூறியதொல்லாம் தரம் உயர்ந்த வார்த்தைகளா? எங்களை உள்ளே பிடித்து போடுவோம் என்று கூறியவருக்கு, எங்கள் கட்சித்தலைமை நினைத்தால் நீங்கள் கோட்டக்குப்பம் தாண்ட முடியாது என உங்கள் பாணியில் பதில் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? நான் ஒரு சாதராண எம்.எல்.ஏ. நீங்கள் மாநில முதல்-அமைச்சர்.
கடந்த 3 ஆண்டு ஆட்சியில் உங்கள் சட்டமன்ற மற்றும் பொது இடத்தின் பேச்சுகளை நீங்களே சீர்தூக்கி பாருங்கள். நம் இருவரில் உங்கள் தரம் என்ன என்பது உங்களுக்கே புரியும். முதல்அமைச்சருக்கு பேச்சில் நாகரீகமும், பண்பும் இருக்க வேண்டும்.
மோடி படத்தை ஏன் போடவில்லை? மோடிதான் பிரதமர் என ஏன் கூறவில்லை? என நமச்சிவாயம் கேட்கிறார். மோடி படத்தை நாங்கள் போடவில்லையா? இந்த நாட்டை உலக நாடுகள் வரிசையில் தலை நிமிர வைக்கவும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த மோடியால் மட்டுமே முடியும்.
தமிழக முதல்-அமைச்சரும், புதுவை மக்கள் முதல்வர் ரங்கசாமியும் தொடர்ந்து மோடியை பற்றி பேசி வருவது உங்களுக்கு கேட்கவில்லையா? நீங்கள் ஏன் முதல்-அமைச்சருடன் பிரசாரத்துக்கு செல்லாமல் தனியாக வாக்கு சேகரிக்க செல்கிறீர்கள்? நாராயணசாமி வந்தால் ஓட்டு விழாது என்பதுதான் காரணமா? இவை அனைத்தையும் மக்கள் புரிந்துகொண்டு என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் இளைஞர் டாக்டர் நாராயணசாமிக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்