search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திப்புராயப்பேட்டையில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல்- 3 வாலிபர்கள் கைது
    X

    திப்புராயப்பேட்டையில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல்- 3 வாலிபர்கள் கைது

    திப்புராயப்பேட்டையில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது28). பெயிண்டர். இவர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் நடுவில் டீப்ளான் (22) மற்றொரு வாலிபர் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அருள்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ் வாலிபர் டீப்ளானை தாக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து டீப்ளான் தனது நண்பர்களான இளங்கோ நகரை சேர்ந்த ஆனந்த், உழவர்கரையை சேர்ந்த விக்னேஷ் (19), திப்புராயப்பேட்டையை சேர்ந்த ரோமார்க் சைமன்ஜெயின் ஆகியோருடன் அருள்ராஜியின் வீட்டுக்கு சென்றார். பின்பு அவர்கள் அங்கு இருந்த அருள்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த அருள்ராஜ் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள் செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, பெரியசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஆனந்த், விக்னேஷ், ரோமார்க் சைமன்ஜெயின் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட டீப்ளானை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×