search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் வருகிற 15-ந்தேதி முதல் கடலில் மீன்பிடிக்க தடை- மீன்வளத்துறை அறிவிப்பு
    X

    புதுவையில் வருகிற 15-ந்தேதி முதல் கடலில் மீன்பிடிக்க தடை- மீன்வளத்துறை அறிவிப்பு

    புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசின் வேளாண் அமைச்சக மீன்வளத்துறையின் செயலர் உத்தரவின்படி கடல்சார் மீன்வளங்களை நீண்டகாலத்துக்கு நிலை நிறுத்தி பாதுகாத்திடும் வகையில் கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியதுபோல் இந்த ஆண்டும் மீன்பிடி தடை அமல்படுத்தப்படுகிறது.

    வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் புதுவையில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திகுப்பம், புதுக்குப்பம் வரையிலும், காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும், ஏனா மில் மீன்பிடி பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் அனைத்து விசைப்படகுகள் கொண்டு மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது.

    மாகி பகுதியில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
    Next Story
    ×