search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
    X

    சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

    சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையிலிருந்து குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் (வயது 38), ஆறுமுகம் (68), சந்தோஷ் (21) ஆகியோர் 3 மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணல் கடத்தி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டுவண்டிகளையும் மடக்கிப்பிடித்து மணலுடன் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ராமஜெயம் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி அடுத்த பையூர் கூட்ரோட்டில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மனுக்கம்பட்டு ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×