search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூர் அருகே பு.புளியம்பட்டி வியாபாரியிடம் ரூ.77 ஆயிரம் பறிமுதல்
    X

    அந்தியூர் அருகே பு.புளியம்பட்டி வியாபாரியிடம் ரூ.77 ஆயிரம் பறிமுதல்

    அந்தியூர் அருகே பு.புளியம்பட்டி வியாபாரியிடம் ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் கணேசனிடம் பணத்தை ஒப்படைத்தனர். #LokSabhaElections2019
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஏற்றும் வாகனத்தை சோதனை செய்தபோது புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (46) என்பவர் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் அந்தியூர் வழியாக சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்குவதற்க்காக பணம் 77 ஆயிரம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

    முறையான ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் தாசில்தார் கணேசனிடம் ரூ. 77 ஆயிரம் தொகையை ஒப்படைத்தனர். #LokSabhaElections2019



    Next Story
    ×