search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்
    X

    கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

    தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து நாளை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #MKStalin
    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று அவர் நாகர்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு இரவில் நெல்லை வந்தார். நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் இரவில் ஓய்வெடுத்தார்.

    இன்று காலை நெல்லை கோர்ட்டு எதிரே உள்ள பெல் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மாலையில் சங்கரன் கோவிலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டு பேசுகிறார்.

    பின்பு இரவில் நெல்லை தாழையூத்து தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் மு.க.ஸ்டாலின் நாளை (10-ந் தேதி) தூத்துக்குடியில் பிரசாரம் செய்கிறார். அவர் தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலையில் உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர். #LokSabhaElections2019 #MKStalin

    Next Story
    ×