search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் குரூப்-2 போட்டித்தேர்வு - 788 பேர் எழுதினர்
    X

    விழுப்புரத்தில் குரூப்-2 போட்டித்தேர்வு - 788 பேர் எழுதினர்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் மூலமாக அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைசஸ்ட் பதவிக்கான குருப்-2 போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் மூலமாக அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைசஸ்ட் பதவிக்கான குருப்-2 போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விழுப்புரத்தில் 6 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,653 பேர் விண்ணப்பித்திருந்தனர். விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களில் நடந்த தேர்வை 788 பேர் எழுதினர். 865 பேர் எழுத வரவில்லை. விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது விழுப்புரம் தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×