search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெலட்டூர் அருகே வங்கி அதிகாரிபோல பேசி விவசாயியிடம் ரூ.23 ஆயிரம் மோசடி
    X

    மெலட்டூர் அருகே வங்கி அதிகாரிபோல பேசி விவசாயியிடம் ரூ.23 ஆயிரம் மோசடி

    மெலட்டூர் அருகே விவசாயிடம் வங்கி அதிகாரிபோல பேசி ரூ.24ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயியான இவர் மெலட்டூரில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

    கார்த்திகேயனிடம் செல்போனில் பேசிய ஒருவர், வங்கி மேலாளர் பேசுவதாக கூறி உங்கள் வங்கி கணக்குக்கான ஏ.டி.எம். காலாவதியாகிவிட்டது. இதனை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்காக ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க பின் நம்பரையும், அடுத்துவந்த ஓடிபி நம்பரையும் கூறுமாறு கேட்டுள்ளார்.

    இதனை நம்பிய கார்த்திகேயன் நம்பரை கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கார்த்திகேயன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். வங்கி சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.23 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. கார்த்திகேயன் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.23ஆயிரத்து 500 டெல்லியில் உள்ள ஒருவரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து மெலட்டூர் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி.யிடமும் கார்த்திகேயன் புகார் செய்தார்.

    நெல் அறுவடை செய்த பணத்தில் செலவு போக மீதி இருப்பு தொகை ரூ.24ஆயிரம் இருந்தது. அதனை விவசாயி பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வங்கிக்கு கொடுக்கப்பட்ட செல்போன் நம்பர் மோசடி கும்பலுக்கு எப்படி கிடைத்தது? வங்கி ஊழியர்களுக்கும் ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் தொடர்பு உள்ளதோ? என சந்தேகம் எழுகிறது. பணம் எடுக்கப்பட்டது குறித்து விபரம் கேட்க போன என்னை பார்த்து தனியார் வங்கி ஊழியர்கள் சிரித்ததன் அர்த்தம் என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

    இதேபோன்று கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி பாபநாசம் தாலுக்கா மேல் செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர் வங்கி கணக்கில் இருந்து 35ஆயிரம் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் எடுத்துள்ளது அதுவும் விவசாயிகளை குறிவைத்து மோசடி கும்பல் தொடர்ந்து இதுபோன்ற பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள் வாடிக்கையாளர் பணத்தை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×