search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை- மகளிர் போலீசார் விசாரணை
    X

    பொள்ளாச்சியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை- மகளிர் போலீசார் விசாரணை

    பொள்ளாச்சியில் 9 வயது சிறுமி தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி தனது தாய் இறந்து விட்டதால் பாட்டி வீட்டில் தங்கி அப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இப் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி இந்த சிறுமியை சோதனை செய்த போது பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர் பொள்ளாச்சி மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்படி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியின் தந்தையை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சற்று ஓய்ந்த நிலையில் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×