என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கண்டாக்டர் தோட்டத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். (வயது 52). ஆட்டோ டிரைவர்.
இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குணசேகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் அவர் ஆட்டோ தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். ஆனாலும், தொடர்ந்து மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானது.
இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து குணசேகரன் வீடு திரும்பிய நிலையில் நேற்று அவருக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்