என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒரத்தநாடு அருகே வேளாண்மை அலுவலரிடம் வழிப்பறி - 3 வாலிபர்கள் கைது
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னநாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் விவேக். இவர் நேற்று நள்ளிரவு ஆழிய வாய்க்கால் ஊராட்சி தெற்குநத்தம் காட்டாற்றுபாலம் பகுதியில் சென்ற போது அவரை 3 வாலிபர்கள் திடீரென வழிமறித்தனர்.
பின்னர் திடீரென அவரை தாக்கி பணத்தை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தென்னநாடு மற்றும் சேதுராயன்குடிகாடு பகுதி இளைஞர்களை அழைத்து வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் பனக்காடு கோரிகுளம் புதுத் தெருவை சேர்ந்த சரவணன் மகன் கார்த்தி (வயது 26), கரந்தை குதிரைக்கட்ட தெருவை சேர்ந்த அந்தோணி மகன் ஜெஸ்டோ (20), ஜெயங்கொண்டம் முத்துசேர்வைக்காரன் தெருவை சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் கலைவாணன்(22) என்று தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் யார்- யாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வழிப்பறி கும்பலை பிடித்த விவேக், மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் உதவி வேளாண் அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்