search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
    X

    தஞ்சையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    தஞ்சையில் 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ரஞ்சனி (வயது 15). 10-ம் வகுப்பு மாணவி. சமீபத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய ரஞ்சனி நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி தற்கொலை செய்ய என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×